தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கரோனா தொற்றை விடவும் அச்சமூட்டும் மற்றொரு விஷயம்

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் பிரச்னைகளும் அவமானங்களுமே மக்களுக்கு கரோனாவை விடவும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கர்நாடக நுரையீரல் மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்து

News image
கரோனா தொற்றை விடவும் அச்சமூட்டும் மற்றொரு விஷயம்
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

ENS


கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் பிரச்னைகளும் அவமானங்களுமே மக்களுக்கு கரோனாவை விடவும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கர்நாடக நுரையீரல் மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் கே.எஸ். சதீஷ் கூறுகிறார்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவிட்டால், அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் மருத்துவ நடைமுறைகள், சமுதாயத்தில் அண்டை வீட்டாரால் நாம் நடத்தப்படும் விதம் போன்றவையே, ஒருவர் கரோனா பரிசோதனை செய்து கொள்வதில் இருந்து தடுப்பதாகக் கூறியுள்ளார்.

ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுவிட்டால், அவர்களது வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சாலையே மூடப்பட்டுவிடுகிறது. வீட்டின் வாசலில் அபாய எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.  இந்த நடைமுறை உலகின் எந்த மூளையிலும் இல்லை என்கிறார் மருத்துவர் சதீஷ்.

அதே சமயம், மக்களும் சமூகப் பொறுப்போடு, அறிகுறிகள் தெரிய வந்தால் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், இந்தியாவில் குணமடைவோர் விகிதம் அதிகமாகவே உள்ளது. இது உயிர்கொல்லி வைரஸ் அல்ல என்றும் கூறுகிறார்.

பெங்களூருவில் ராஜாஜி நகர் - மகாலஷ்மி பகுதியில் வசித்து வரும் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத நபர் ஒருவர் இது பற்றி கூறுகையில், தாய், தந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதும் வீட்டுக்கு சீல் வைத்துவிட்டார்கள், அவர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஒரு சாலையை மூடுவதால் கரோனாவை எவ்வாறு தடுக்க முடியும் என்று நிர்வாகம் நினைக்கிறது என்று புரியவில்லை என்று வேதனையோடு கூறுகிறார்.

ஒருவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாக இருக்கும் எச்ஐவி பரிசோதனை செய்து கொள்ளும் போது கூட இந்த அளவுக்கு அச்சப்படுவதில்லை, ஆனால், ஒருவர் கரோனா பரிசோதனைக்கு வரும் போது அவ்வளவு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்கிறார் நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர் மருத்துவர் டாக்டர் சந்திரசேகர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.