புது தில்லி: நாட்டில் தினந்தோறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், நல்ல விஷயமாக, தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையோடு, வென்டிலேட்டர் தேவைப்படுவோர் மற்றும் ஆக்ஸிஜன் சேவை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் கடந்த 2 மாதங்களில் படிப்படியாகக் குறைந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மே 20-ம் தேதி நாட்டில் 61 ஆயிரம் கரோனா நோயாளிகள் இருந்த போது 1,800 (3%) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 275 (0.45%) நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் வசதியும், 1,700 (2.94%) நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் உதவியும் தேவைப்பட்டது.
அதே சமயம் ஜூலை 31-ம் தேதி நாட்டில் 5.28 லட்சம் கரோனா நோயாளிகள் இருந்த போது 8,504 (1.61%) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 1580 (0.28%) நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் வசதியும், 12,255 (2.3%) நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் உதவியும் தேவைப்பட்டது.
கரோனா பாதித்த நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாவது குறைந்த அதே நேரத்தில், பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மே மாத இறுதியில் கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 3% ஆக இருந்த நிலையில் தற்போது அது 2.15% ஆகக் குறைந்துள்ளது. இது, பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மருத்துவர்களுக்குக் கிடைத்த அனுபவத்தின் மூலமாகவும் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கரோனா தொற்றுப் பரவத் தொடங்கிய காலக்கட்டத்தை விட, தற்போது அதிக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதும், விரைவாக கரோனா நோயாளிகளைக் கண்டறிவதும் கூட இதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


