மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

எடியூரப்பாவை சந்தித்திருந்தால் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்: கர்நாடக அரசு

முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சமீபத்தில் முதல்வரை சந்தித்த பொதுமக்கள் தாங்களாகவே கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image

முதல்வரை சந்தித்திருந்தால் கரோனா சோதனை செய்துகொள்ளுங்கள்: கர்நாடக அரசு

Updated On :3 ஆகஸ்ட் 2020, 6:57 am


பெங்களூரு: முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சமீபத்தில் முதல்வரை சந்தித்த பொதுமக்கள் தாங்களாகவே கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும், அவரது மகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக முதல்வரின் பயண விவரங்களை சேகரிக்க இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் முதல்வரை நேரில் சந்தித்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முதல்வர் கடந்த வாரத்தில் மேற்கொண்ட சந்திப்பு, பயண விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

எடியூரப்பாவும், அவரது மகளும் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எடியூரப்பாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சுட்டுரையில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பரிசோதனையில் எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், எனது உடல்நிலையில் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. எனினும், மருத்துவா்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீப நாள்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்களை, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.