பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

23 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்களின் வங்கிக் கணக்கில் நிதியுதவி சேர்ப்பு: தில்லி அரசு

தில்லியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் ஆட்டோ, டேக்ஸி மற்றும் இ-ரிக்சா ஓட்டுநர்களில் இதுவரை 23 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.5 ஆயிரம் பணம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக அ

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:29 pm

ANI


தில்லியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் ஆட்டோ, டேக்ஸி மற்றும் இ-ரிக்சா ஓட்டுநர்களில் இதுவரை 23 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.5 ஆயிரம் பணம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கஹ்லாட், தில்லி அரசின் ரூ.5000 நிவாரணத் தொகையைப் பெற இதுவரை 1.6 லட்சம் ஆட்டோ, டேக்ஸி மற்றும் இ-ரிக்சா ஓட்டுநர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 23 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்கில் பணம் சேர்ப்பிக்கப்பட்டு விட்டது, மேலும் 20 ஆயிரம் ஓட்டுநர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது, விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.