பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2003 ஆக உயர்வு

புது தில்லியில் நேற்று புதிதாக 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 2003 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:29 pm

ANI


புது தில்லி: புது தில்லியில் நேற்று புதிதாக 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 2003 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், தில்லியில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது. அதில் 38 பேருக்கு வேறு பல உடல் உபாதைகள் இருந்துள்ளன. விரைவு பரிசோதனை கருவிகள் மூலம் சோதனை செய்யும் பணி இன்று தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை, தில்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்த குறைந்த வயதுடைய குழந்தை இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.