பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

குஜராத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 7 பேர் பலி

குஜராத்தில் நேற்று மாலை 6 மணி முதல் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:28 pm

ANI

குஜராத்தில் நேற்று மாலை 6 மணி முதல் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலில், குஜராத்தில் ஒரே நாளில் புதிதாக 176 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஆகமதாபாத்தில் 143 பேரும், சூரத்தில் 13 பேரும், வதோராவில் 13 பேரும் அடங்குவர்.

இதனால் குஜராத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.