ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ராஜஸ்தான்: பிளாஸ்டிக் பைகளில் துப்பி வீடுகளில் வீசியப் பெண்; சிசிடிவி கேமராவில் சிக்கினார்

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

News image
Updated On :13 ஏப்ரல் 2020, 8:27 am


நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

இதற்கிடையே, ராஜஸ்தானில், ஒரு பெண் பிளாஸ்டிக் பைகளில் துப்பி, அதனை வீடுகளுக்குள் வீசிச் செல்லும் சிசிடிவி கேமரா பதிவு காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் வல்லப்வாடி பகுதியில், ஒரு பெண்மணி, பிளாஸ்டிக் கவர்களில் துப்பி, அதனை வீடுகளுக்குள் வீசி எறியும் சிசிடிவி கேமரா பதிவைப் பார்த்த காவல்துறையினர், உடனடியாக அப்பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தினர். குற்றம் இழைத்த பெண்மணியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Story image

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுவிடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டிவிட்டது. உயிரிழப்பு 300 ஆக இருக்கும் நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில விஷமிகளின் இதுபோன்ற செயல்களால், மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.