உலக அளவில் 70 சதவீத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 40 டன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் மூலக்கூறை தயாரிக்கும் திறன் இந்தியாவில் உள்ளது. இதைக் கொண்டு 200 மில்லிகிராம் அளவுகொண்ட 20 கோடி மாத்திரைகளைத் தயாரிக்க முடியும். மலேரியா, மூட்டுவலி உள்ளிட்ட சிகிச்சையில் இவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே, நாட்டில் தற்போதுள்ள தேவையை பூா்த்தி செய்வதற்கும் மேலும் கூடுதலான திறன் நமக்கு உள்ளது. மேலும் தேவை ஏற்பட்டால், அந்த மருந்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் தயாராக உள்ளோம். இந்த மருந்துகள் பதுக்கப்படுவதை தடுக்கவும், விநியோகம் சீராக இருப்பதையும் உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.