ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்யுங்கள்: மாநில அரசுகளுக்கு உள்துறை கடிதம்

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :8 ஏப்ரல் 2020, 7:37 am

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பதுக்குதல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்தல் போன்றவற்றை தடுத்து, பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் அதனை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் போக்குவரத்து உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பலரும் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது, பதுக்குதல் போன்றவற்றால், விலை உயர்வு அடையும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், அதனை உற்று கவனித்து, அதுபோன்ற நடவடிக்கைகளை முற்றிலும் களையும் பணியையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

எனவே, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அனைத்தும், தத்தமது பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவுக்கு கையிருப்பில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பொருட்களை பதுக்குதல், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்றவற்றில் ஈடுபடுவதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும். அவ்வாறு ஈடுபடுவோர் மீது 7 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவோரை மாநில அரசுகள் கைது செய்து, அவர்கள் மீது வழக்குத் தொடரவும் அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய உள்துறை வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.