டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

46 நாட்களுக்கு பின்னர் செயல்படும் மெஹபூபா முப்தியின் ட்விட்டர் கணக்கு: இயக்குவது யார் தெரியுமா? 

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் ட்விட்டர் கணக்கு 46 நாட்களுக்கு பின்னர் இயங்கத் தொடங்கியுள்ளது. அவரது மகள் இல்திஜா இந்த ட்விட்டர் கணக்கை இயக்குவதாகத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:09 am

Muthumari

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் ட்விட்டர் கணக்கு 46 நாட்களுக்கு பின்னர் இயங்கத் தொடங்கியுள்ளது. அவரது மகள் இல்திஜா இந்த ட்விட்டர் கணக்கை இயக்குவதாகத் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, பாதுகாப்பு கருதி காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று மெஹபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா, தனது தாயாரை சந்திக்க பல நேரங்களில் முயற்சித்து முடியாத காரணத்தினால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  தனது தாயாரை சந்தித்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. எனவே, உடனடியாக ஸ்ரீநகருக்குச் சென்று அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று இல்திஜா தனது மனுவில் கூறியிருந்தார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்த இந்த வழக்கில் இல்திஜா, தாயார் முப்தியை சந்திக்க அனுமதி வழங்கியது. கடந்த வாரம், பலத்த பாதுகாப்புக்கு இடையே, மெஹபூபா முப்தியை சந்தித்து பேசினார் இல்திஜா.

இதைத்தொடர்ந்து, 46 நாட்களுக்கு பின்னர்  மெஹபூபா முப்தியின் ட்விட்டர் கணக்கு செயல்படத் தொடங்கியுள்ளது. அவரது மகள் இல்திஜா இந்த ட்விட்டர் கணக்கை இயக்குவதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் வெளியிட்டுள்ள தகவலில், 'காஷ்மீரில் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித தகவல் தொடர்பு சேவையும் கிடைக்கவில்லை. ஏன், தினசரி செய்தித்தாள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். மேலும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும் அவர் தொடர்ந்து முப்தியின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.