சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் தற்கொலை முயற்சிகள்!

நாட்டின் தலைநகரில் உள்ள டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் தற்கொலை முயற்சிக்கான இடமாக மாறி வருகிறது. கடந்த 17 மாதங்களில் மட்டும் குறைந்தபட்சம் 25 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:00 am

Muthumari

நாட்டின் தலைநகரில் உள்ள டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் தற்கொலை முயற்சிக்கான இடமாக மாறி வருகிறது. கடந்த 17 மாதங்களில் மட்டும் குறைந்தபட்சம் 25 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் மக்கள் அதிகம் கூடும் இடமாகும். இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், டெல்லி மெட்ரோவின் பல்வேறு வழித்தடங்களில் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். ஜனவரி 2018 முதல் மே 2019 வரை டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் 25 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 

மேலும், 2014- 2018ம் கால கட்டத்தில் 80க்கும் அதிகமாக தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளதாகவும் தகவல் உள்ளது. இரு தினங்களுக்கு முன்னதாக 22 வயதான பாதுகாப்பு காவலர் ஒருவர் செக்டர் 61 மெட்ரோ நிலையத்தில் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். திங்கட்கிழமை ஜாண்டேவலன் மெட்ரோ ரயில் நிலையத்தில் 40 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரயில் வரும் போது மட்டுமே திறக்கும் அளவுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இன்னும் அமைக்கப்படவில்லை. அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்று மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், காவல்துறை இந்தத் தற்கொலை முயற்சிகள் குறித்து விசாரணை செய்து வருவதால், இதுகுறித்த பல கேள்விகளுக்கு மெட்ரோ நிர்வாகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.