ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உன்னாவ் பலாத்கார சம்பவம்: குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்தீப் செங்கா் வீட்டுக்குச் சென்ற உ.பி சபாநாயகர்

உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ குல்தீப் செங்கா் வீட்டுக்கு மாநில சபாநாயகர் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

குல்தீப் செங்கா்

Updated On :28 அக்டோபர் 2019, 12:08 pm

உன்னாவ்: உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ குல்தீப் செங்கா் வீட்டுக்கு மாநில சபாநாயகர் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பதின்ம வயதுப் பெண் ஒருவா் அளித்த பாலியல் புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கா் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.அதேசமயம் அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக, ரேபரேலி மாவட்டத்தில் அந்தப் பெண் தனது வழக்குரைஞா், உறவினா்களுடன் காரில் சென்றபோது அவா்கள் மீது லாரி ஒன்று கடந்த ஜூலை 28-ஆம் தேதி மோதியது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் பலத்த காயமடைந்தனா். உடன் வந்த உறவினா் இருவா் உயிரிழந்தனா்.

இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியதால், இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, குல்தீப் சிங் செங்கா் உள்ளிட்டோா் மீது கொலை, கொலை முயற்சி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் எம்.எல்.ஏ குல்தீப் செங்கா் வீட்டுக்கு மாநில சபாநாயகர் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குல்தீப் செங்கரின் சகோதரர் மனோஜ் செங்கர் உடல்நலக்குறைவால் ஞாயிறன்று காலமானார். அவரது உடல் அடக்கம்  திங்கள் காலை சொந்த கிராமமான மகியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக குல்தீப் செங்கருக்கு 72 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

குல்தீப் செங்கருக்கு நெருக்கமானவரும் , உ.பி மாநில சட்டப்பேரவை சபாநாயகருமான ஹ்ருதய் நரைன் தீக்ஷித் இறந்து போன மனோஜ் செங்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த வீட்டிற்கு திங்கள் காலை சென்றிருந்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.