ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு காரணம் இவரைப் போன்றவர்கள்தான்: ஏன் இப்படி பாய்கிறது காங்கிரஸ்?

இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு காரணம் பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

News image

பத்ருதீன் அஜ்மல் எம்.பி

Updated On :28 அக்டோபர் 2019, 11:32 am

புது தில்லி: இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு காரணம் பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு இனிமேல் அரசு வேலை கிடையாது என்று   அசாம் மாநில அரசு சமீபத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனைக் கடுமையாக விமர்சித்து நாடாளுமன்ற எம்.பியும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சித் தலைவருமான பத்ருதீன் அஜ்மல் சனிக்கிழமையன்று பேசும்போது, ' இஸ்லாமியர்கள் யாருடையாய் பேச்சையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து குழநதை பெற்றுக் கொண்டேதான் இருப்பார்கள். அரசு எப்படியும் இஸ்லாமியர்களுக்கு வேலைகளை அளிக்கப்போவது இல்லை. நாங்கள் அதை எதிர்பார்க்கவும் இல்லை' என்று கடுமையாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில் இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு காரணம் பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா செய்தியாளர்களிடம் கூறியதாவதது:

தன்னார்வக் குடும்பக் கட்டுப்பாடு என்பது இப்போதைய காலத்தின் தேவை என்று நான் கருதுகிறேன். பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள் இதனை மதரீதியாக சிதைத்து பேசும்போது, நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்கக்ளின் எதிர்காலத்தை விலையாக்கி, அதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கு அவர் துணை போகிறார் என்றுதான் அர்த்தம்.

இத்தகைய அறிக்கைகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு மதச்சாயம் பூசிவிடுகின்றன. அத்துடன் இதன் மூலம் அரசியல் லாபம் அடைவதற்கான ஒரு வாய்ப்பை பாஜக போன்ற அரசியல் கட்சிகளுக்கு கொடுத்து விடுகின்றன.

இஸ்லாமியர்களுக்கு அரசு வேளைகளில் உரிய பங்கு உள்ளது. அதைக் குறித்து தீர்மானிப்பதற்கு இவர் யார்? இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் காரணம்.

இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.