புது தில்லி: இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு காரணம் பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு இனிமேல் அரசு வேலை கிடையாது என்று அசாம் மாநில அரசு சமீபத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனைக் கடுமையாக விமர்சித்து நாடாளுமன்ற எம்.பியும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சித் தலைவருமான பத்ருதீன் அஜ்மல் சனிக்கிழமையன்று பேசும்போது, ' இஸ்லாமியர்கள் யாருடையாய் பேச்சையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து குழநதை பெற்றுக் கொண்டேதான் இருப்பார்கள். அரசு எப்படியும் இஸ்லாமியர்களுக்கு வேலைகளை அளிக்கப்போவது இல்லை. நாங்கள் அதை எதிர்பார்க்கவும் இல்லை' என்று கடுமையாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு காரணம் பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா செய்தியாளர்களிடம் கூறியதாவதது:
தன்னார்வக் குடும்பக் கட்டுப்பாடு என்பது இப்போதைய காலத்தின் தேவை என்று நான் கருதுகிறேன். பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள் இதனை மதரீதியாக சிதைத்து பேசும்போது, நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்கக்ளின் எதிர்காலத்தை விலையாக்கி, அதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கு அவர் துணை போகிறார் என்றுதான் அர்த்தம்.
இத்தகைய அறிக்கைகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு மதச்சாயம் பூசிவிடுகின்றன. அத்துடன் இதன் மூலம் அரசியல் லாபம் அடைவதற்கான ஒரு வாய்ப்பை பாஜக போன்ற அரசியல் கட்சிகளுக்கு கொடுத்து விடுகின்றன.
இஸ்லாமியர்களுக்கு அரசு வேளைகளில் உரிய பங்கு உள்ளது. அதைக் குறித்து தீர்மானிப்பதற்கு இவர் யார்? இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் காரணம்.
இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


