சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மகாராஷ்டிர, ஹரியாணா தேர்தல் முடிவுகள்: மௌனம் காக்கும் ராகுல் காந்தி!

மகாராஷ்டிர, ஹரியாணா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:31 am

Muthumari

மகாராஷ்டிர, ஹரியாணா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது அக்கட்சியினர் மத்தியிலே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

மகாராஷ்டிரத்திலும், ஹரியாணாவிலும் கடந்த 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனா  கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. ஹரியாணாவில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஹரியாணாவின் அடுத்த முதல்வரைத் தேர்வு செய்வதில் துஷ்யந்த் செளதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது.

இரண்டு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியும் ஆன ராகுல் காந்தி இதுவரை எந்த கருத்தையுமே தெரிவிக்கவில்லை.   

கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் கூட, கட்சி குறித்த எந்த முன்னேற்ற நடவடிக்கைகளையும் தலைவர் எடுக்கவில்லை என அரசியல் வட்டாரத்தில் பொதுவாக பேசப்படுகிறது. 

இந்நிலையில், சோனியா காந்தியாவது கட்சியின் மூத்தத் தலைவரான பூபிந்தர் சிங் ஹூடேவுடன் ஹரியாணா தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்துள்ளார். அதேபோன்று தேர்தல் முடிவுகள் சற்று மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது காங்கிரஸ் கட்சியினர்  ஒரு சில மூத்த தலைவர்கள் மத்தியிலே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.