ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நவம்பர் 15க்குள் அனைத்து சாலைகளும் சரிசெய்யப்பட வேண்டும்: உ.பி முதல்வர் உத்தரவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட வேண்டும் என்று மாநில பொதுப்பணித்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

News image
Updated On :18 அக்டோபர் 2019, 9:35 am

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட வேண்டும் என்று மாநில பொதுப்பணித்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

முதல்வர் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 'பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் உள்ள டெண்டர்களை உடனடியாக முடிக்க வேண்டும். வாரணாசி உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளின் தரம் சரியில்லை என்று தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன.

எனவே வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட  வேண்டும். எந்த வேலையும் நடக்காத மாவட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அதிகாரிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். எனவே, கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் சரி செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். 

மேலும், 'கோரக்பூர்-வாரணாசி, மவு- கோரக்பூர் மற்றும்மவு- வாரணாசி சாலைகளை ஆய்வு செய்து உடனடி அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். பொதுப்பணித்துறை செயலர் இந்த அனைத்துப் பணிகளையும் பார்வையிட வேண்டும். 

ஹரித்வாரில் 2021 கும்பமேளா விழாவையொட்டி, ஹரித்வார் செல்லும் சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும்' என்று.தெரிவித்துள்ளார் . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.