ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? பரிந்துரைக் கடிதம் அனுப்பினார் ரஞ்சன் கோகோய்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பது குறித்த தனது பரிந்துரைக் கடிதத்தை, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுப்பியுள்ளார்.

News image

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

Updated On :18 அக்டோபர் 2019, 11:45 am

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பது குறித்த தனது பரிந்துரைக் கடிதத்தை, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய். இவர் உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை  நீதிபதியாவர். கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பொறுப்பேற்ற இவர், வரும் நவம்பர் 17-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

வழக்கமாக நீதித்துறை உயர் பதவி நியமனங்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறையின்படி, சரியான சமயத்தில் மத்திய சட்ட அமைச்சகமானது தலைமை நீதிபதியிடம், அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரையினைக் கோரும்.

பின்னர் அந்தப் பரிந்துரையானது பிரதமருக்கு அனுப்பப்படும். அவர் அதனை ஜனாதிபதிக்கு தனது கருத்துடன் இணைத்து அனுப்பி வைப்பதுதான் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.  பொதுவாக பணி மூப்பின் அடிப்படையில் இரண்டாவது மூத்த நீதிபதிதான் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது வழக்கமாகும்.   

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பது குறித்த தனது பரிந்துரைக் கடிதத்தை, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுப்பியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியான பாப்டேவை பரிந்துரை செய்துள்ளார் என்று தெரிகிறது. பரிந்துரையின்படி நவம்பர் 18-ஆம் தேதியன்று பதவியேற்கும் பாப்டே, ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள்கு அந்தப் பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.