ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஏன் சாவர்க்கருக்கு மட்டும்? கோட்ஸேவுக்கு இல்லை?  பாரத ரத்னா கோரிக்கை குறித்து பொங்கிய காங்கிரஸ் 

ஏன் சாவர்க்கருக்கு மட்டும்? கோட்ஸேவுக்கு இல்லை? என்று பாரத ரத்னா விருது கோரிக்கை குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image

காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி

Updated On :17 அக்டோபர் 2019, 11:45 am

புது தில்லி: ஏன் சாவர்க்கருக்கு மட்டும்? கோட்ஸேவுக்கு இல்லை? என்று பாரத ரத்னா விருது கோரிக்கை குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. அதில் பாஜகவின் மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸின் மூத்த சிந்தனையாளர்களில் ஒருவரான வீர் சாவர்க்கருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா  கிடைக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் ஏன் சாவர்க்கருக்கு மட்டும்? கோட்ஸேவுக்கு இல்லை? என்று பாரத ரத்னா விருது கோரிக்கை குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி வியாழனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தேசிய ஜனநாயக முன்னணி / பாஜக அரசு பாரத ரத்னா விருதை ஏன் சாவர்க்கருக்கு மட்டும் அளிக்க நினைக்கிறது? ஏன் கோட்ஸேவுக்கு இல்லை? சாவர்க்கர் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால் கோட்ஸேவோ குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடவும் செய்யப்பட்டுள்ளார்.

காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தில் அவரது நினைவுகளை மாசுபடுத்த விரும்பினால் அதை முழுவதுமாக செய்து விடுங்கள்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.