டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிப்பது நோக்கமல்ல: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிப்பதை காவல்துறையினர் தங்களது நோக்கமாக மாற்றிக் கொள்ளக்கூடாது என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:24 am

Muthumari

வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிப்பதை காவல்துறையினர் தங்களது   நோக்கமாக மாற்றிக் கொள்ளக்கூடாது என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  

சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 'போக்குவரத்துத் துறை பாராட்டத்தக்க வகையில் தனது பணியினைச் சிறப்பாகச் செய்து வருகிறது. காவல்துறையினர் அபராதம் வசூலிக்கும் நோக்கில் வாகன ஓட்டிகளை குறிவைக்கக் கூடாது, மாறாக வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும். பள்ளியிலும் குழந்தைகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்து கற்பிக்க வேண்டியது அவசியம். 

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும்; நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட்களைப் பயன்படுத்த வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மக்களின் ஆதரவு இன்றி இந்த முயற்சிகள் வெற்றி பெறாது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளுக்கென பாடத்திட்டம் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்' என்று பேசினார். 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் புதன்கிழமை நடந்த இந்தப் பேரணியில் காவல்துறையினரின் 25 இருசக்கர வாகனங்கள், 10 கார்கள், 100 இரு சக்கர வாகனங்கள், 100 என்சிசி மாணவர்கள், மற்றும் மற்றும் 700 பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.