ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

லக்னௌ சாலையோரக் கடையில் நடந்த விநோதக் கொள்ளை: எதைத் திருடினார்கள் தெரியுமா? 

உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் சாலையோரக் கடை ஒன்றில் நடந்த விநோதக் கொள்ளை சம்பவம் போலீசாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

News image

லக்னௌ திருடன்

Updated On :16 அக்டோபர் 2019, 11:36 am

லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் சாலையோரக் கடை ஒன்றில் நடந்த விநோதக் கொள்ளை சம்பவம் போலீசாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் மனஸ் என்க்ளேவ் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு பப்பு சவுராசியா  என்பவர் சாலையோரத்தில் காய்கறிக் கடை  ஒன்றை நடத்தி வருகிறார். திங்கள் இரவு வழக்கம் போல வியாபாரம் முடிவடைந்த பிறகு, காய்கறிகளை எடுத்து வைத்து தார்பாய் ஒன்றின் மூலம் மூடி வைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காய்கறிகள் தாறுமாறாக இறைந்து கிடைந்ததுடன், மரப்பெட்டிகளில் வைக்கபட்டிருந்த வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றைக் காணவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது நண்பர்களுக்கு தகவல் அளித்ததுடன், பல இடங்களில் தேடியும் பார்த்துள்ளனர். பின்னர் இறுதியாக செவ்வாய் இரவு போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பப்பு சவுராசியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'எனக்கு கண்டிப்பாக ரூ. 10 முதல் 12 ஆயிரம் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மற்ற காய்கறிகள் எதையும் தொடவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.  ஒன்றுக்கு மேற்பட்டோர் வாகனத்துடன் வந்து இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது' என்று தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக விசாரித்து வருவதாக காசிப்பூர் காவல் நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லக்னௌவில் தற்போது வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ 45-ம், பூண்டு ரூ 200-ம் மற்றும் தக்காளி கிலோ ரூ 70-க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.