சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

அட்சய திருதியை நாளில் இப்படியும் நடக்கலாம்: உஷார்! காவல்துறை எச்சரிக்கை!!

இன்று அட்சய திருதியை நாள். இந்நாளில் எது வாங்கினாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:51 am

ENS


இன்று அட்சய திருதியை நாள். இந்நாளில் எது வாங்கினாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். 

அதனால்தான் மக்கள் அந்த காலத்தில் அரிசி, பருப்பு, மஞ்சள் என வீட்டுக்குத் தேவையான பொருட்களை இந்நாளில் வாங்குவதும், பிறருக்கு தேவையானவற்றை தானமாக வழங்குவதும் மிகச் சிறந்த விஷயமாகக் கூறப்பட்டது.

ஆனால் இதெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? நகைக் கடைகளில் கடந்த வாரமே அட்சய திரிதியை நாளை முன்னிட்டு நகைகளை வாங்க முன்பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சென்னை, பெங்களூரு என பல நகரங்களில் நேற்று இரவு நகைக் கடைக்குள் நுழைந்த பல பெண்கள் இன்று காலை வரை வெளியே வராமல் கூட்டத்துக்குள் சிக்கியிருக்கும் அளவுக்கு நகைக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில், பெங்களூரு காவல்துறை ஆணையர் டி. சுனீல் குமார் கூறுகையில், நகைக் கடைகள் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து வாகனங்களையும் நகைக் கடைகளை சுற்றி அவ்வப்போது  ரோந்து வர அறிவுறுத்தியுள்ளோம். சந்தேகப்படும்படி யார் நடமாடினாலும் விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Story image

நகைக் கடைகளும், தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளோம். நகைக் கடைகளில் கூடுதலாக தனிப்பட்ட பாதுகாப்புக்கான காவலர்களை நியமித்துக் கொள்ளுமாறும், அவர்களது வாடிக்கையாளர்களுக்கும், வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கத்துக்கும், அவர்கள் கடையில் இருந்து வாகனங்களுக்குச் செல்லும் போது அவர்களது உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளோம்.

நகைக் கடையில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும், வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைத் திருட வரும் கும்பல்கள் மீது விழிப்போடு இருக்குமாறும், யார் மீது சந்தேகம் வந்தாலும் உடனடியாகக் காவல்துறையினரை அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுமக்களுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார் சுனீல் குமார். அதாவது, இதுபோன்ற நாட்களில் நகை வாங்கிக் கொண்டோ, நகை வாங்க பணத்தை எடுத்துக் கொண்டோ வருவோரை திசை திருப்ப ரூ.10 அல்லது ரூ.100 தாள்களை சாலையில் வீசி, அது தங்களுடையதா என்று திருடர்கள் கேட்பார்கள், பணத்தை குனிந்து எடுக்கும் போது கையில் இருக்கும் பையை திருடர்கள் பறித்துச் செல்வது வழக்கமாக நடக்கும் சம்பவம். எனவே அதில் கவனமாக இருங்கள்.

நாம் நகை வாங்குவது குறித்து  அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருப்பதும், ஒரு நகை வாங்க கும்பலாக கடைக்கு வருவதையும் தவிர்க்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பல முன்னணி நகைக் கடைகளில் ஏராளமான நகைகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதால் இன்று கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மக்களே உஷார்..
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.