சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பள்ளி மாணவர்களின் உடல் எடையில் 10% மட்டுமே புத்தகப்பை எடை இருக்க வேண்டும்: சொன்னது?

ஒவ்வொரு பள்ளி மாணாக்கரின் உடல் எடையில் சராசரியாக 10 சதவீதம் மட்டுமே பள்ளிப் புத்தகப் பையின் எடை இருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :4 மே 2019, 7:02 am


பெங்களூரு: ஒவ்வொரு பள்ளி மாணாக்கரின் உடல் எடையில் சராசரியாக 10 சதவீதம் மட்டுமே பள்ளிப் புத்தகப் பையின் எடை இருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பள்ளிப் பாடப் புத்தகங்களின் பையின் எடை குறித்துத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

அதாவது ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களின் பாடப்புத்தகப் பை 1.5 அல்லது 2 கிலோவுக்கு மிகாமலும், 3 மற்றும் 4, 5வது படிக்கும் மாணவர்களின் பாடப்புத்தகப் பையின் எடை 2 முதல் 3 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6 - 8ம் வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகப் பை 3 - 4 கிலோவும், 9-10ம் வகுப்புக்கு 5 கிலோவும் இருக்கலாம்.

பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்ததை அடுத்து பள்ளிக் கல்வித்துறை இந்த அறிக்கையை அனுப்பியுள்ளது.

அது மட்டுமில்லாமல் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது, ஒவ்வொரு மாதமும் 3வது சனிக்கிழமை புத்தகப்பை இல்லாமல் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். அன்று இதர விளையாட்டு, திறன் வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.