அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பெங்களூரு ஆட்டோ ஓட்டுநரின் ரூ.1.6 கோடி மதிப்புள்ள பங்களா: இப்போ இதுதாங்க ஹாட் நியூஸ்

விக்ரமாதித்தன் கதைகளையே விஞ்சும் அளவுக்கு இருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணியன் வாழ்க்கை.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:49 am

ENS


பெங்களூரு: விக்ரமாதித்தன் கதைகளையே விஞ்சும் அளவுக்கு இருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணியன் வாழ்க்கை.

Story image

மகாதேவபுராவில் உள்ள ரூ.1.6 கோடி மதிப்பிலான வில்லாவில் வசித்து வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி. இவரது பணிக்கும், சொத்துக்கும் சம்பந்தமில்லாததால், அக்கம் பக்கத்தினர் இவர் மீது வருமான வரித்துறையில் புகார் அளித்தார்கள். யாருடைய பினாமியாகவோ இவர் செயல்படுவதாகவே சந்தேகிக்கப்பட்டது.

இவரை தொடர்ந்து கண்காணித்து வந்த வருமான வரித்துறையினர், அதிரடியாக இவரது வீட்டை சோதனையிட்டனர்.

அப்போதுதான் பல உண்மைகள் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. அதாவது, பெங்களூருவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியை நிர்வகித்து வரும் ஆஸ்திரேலிய பெண் லேரி. 

இவரை பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டுக்கும் சுப்ரமணியம்தான் அழைத்துச் செல்வார். அவரது பணிவு மற்றும் கடமையால் ஈர்க்கப்பட்ட லேரி அவரது ஏழ்மையைப் பார்த்து, சுப்ரமணியத்துக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினார். அதற்காக மிகப்பெரிய வில்லா ஒன்றை வாங்கி பரிசளித்தார். அப்போதுதான் அவர் யாருக்கும் பினாமி இல்லை என்பது தெரிய வந்தது. அவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீ போல நேற்று பரவியது.

இதையடுத்து அதேப் பகுதியைச் சேர்ந்த பாஜக அமைச்சர் அரவிந்த் லிம்பாவலியின் பணம்தான் அது என்று தகவல்கள் கசிந்ததால், அதற்கு அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.