அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும்: சிவசேனை

இலங்கையில் விதிக்கப்பட்டிருப்பதை போல, இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என்று சிவ சேனை வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:48 am

ENS


மும்பை: இலங்கையில் விதிக்கப்பட்டிருப்பதை போல, இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என்று சிவ சேனை வலியுறுத்தியுள்ளது.

யார் ஒருவரையும் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதால், அவசர காலத்தை கவனத்தில் கொண்டு இந்தத் தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது யார் ஒருவரும் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதைனுமதிக்கக் கூடாது என்றும் சிவ சேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நடந்து வரும் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.