சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும்: சிவசேனை

இலங்கையில் விதிக்கப்பட்டிருப்பதை போல, இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என்று சிவ சேனை வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :1 மே 2019, 5:51 am


மும்பை: இலங்கையில் விதிக்கப்பட்டிருப்பதை போல, இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என்று சிவ சேனை வலியுறுத்தியுள்ளது.

யார் ஒருவரையும் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதால், அவசர காலத்தை கவனத்தில் கொண்டு இந்தத் தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது யார் ஒருவரும் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதைனுமதிக்கக் கூடாது என்றும் சிவ சேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நடந்து வரும் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.