குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

தேர்தலில் இதெல்லாம் சாதாரணமப்பா: மோடியும், ராகுலும் பக்கத்து வீட்டுக்காரர்கள்!

பெயரில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியவர் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நாடகங்களுக்குச் சொந்தக்காரரான பெயர் பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:30 am

ENS


ராய்ப்பூர்: பெயரில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியவர் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நாடகங்களுக்குச் சொந்தக்காரரான பெயர் பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர்.

ரோஜா மலரை வேறு எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது சுகந்தமான நறுமணத்தையே அளிக்கும் என்று அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மையல்லவா?

சரி பெயரைப் பற்றி ஏன் இந்த அளவுக்கு மொக்கைப் போடுகிறீர்கள், உங்கள் மொக்கைக்கு ஏன் ஷேக்ஸ்பியரை எல்லாம் உதவிக்கு அழைக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது இங்கே நன்றாகவே தெரிகிறது. காரணம் நீங்கள் மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாகவே சொல்லி விட்டீர்கள்.. 

முறைக்காதீர்கள்.. நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிடுகிறோம்.. நமக்குள் சண்டை வேண்டாம்.

நீங்கள் நம்பினால் நம்புங்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 3 வாக்காளர்களின் பெயர்கள் நரேந்திர மோடி என்று பதிவாகியுள்ளது. பிலாஸ்புர், துர்க் நகர், சக்தி ஆகிய மூன்று பகுதிகளில் நரேந்திர மோடி என்ற பெயரில் 3 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இது மட்டுமா, அதே பகுதியில்  அரை டஜன் ராகுல் காந்திக்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களை எல்லாம் விஞ்சும் வகையில் சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகெல் பெயரைக் கொண்ட 19 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான். இவர்களில் பெரும்பாலானோர் மேற்கண்ட அதே பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்.  

அந்த 19 பேரில் ஒருவரான புபேஷ் பாகெல், என் பெயரை யாரிடமாவது சொன்னால் அவர்கள் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். மாநிலத்தின் முதல்வரை பெயரை வைத்திருப்பதால் என்கிறார்.

சத்தீஷ்கர் மாநிலம் படன் தொகுதியில் முதல்வர் புபேஷ் பாகல் பெயர் வாக்காளர் பதிவேட்டில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் கண்டது மோடி, ராகுல் என இவர்கள் எல்லாம் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்களாகக் கூட இருக்கலாம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.