குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

கர்நாடக கட்டட விபத்து: மதிய உணவுக்கு சற்று தாமதமானதால் உயிரை இழந்த தந்தை-மகன்

கர்நாடக மாநிலம், தார்வாட்டில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:26 am

ENS


தர்வாத்: கர்நாடக மாநிலம், தார்வாட்டில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், குமரேஸ்வர நகரில் 5 மாடிக் கட்டடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென கட்டடம் சரிந்து விழுந்தது. 

இதில் மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.  இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 

இடிந்துவிழுந்த இந்த கட்டடத்தில் ஒரு கடையை வாங்கி ஜனவரி மாதம் முதல் பெயிண்ட் கடை நடத்தி வந்த மல்லேஸ்வரய்யாவின் குடும்பத்தினர், விரைவில் தங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று காத்திருந்த நிலையில், அவர்களது தலையில் இடி விழுந்ததைப் போல இந்த கட்டடம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் மல்லேஸ்வரய்யாவும் (62) அவரது மகன் ஆசித்தும் (27) உயிரிழந்தனர். 

புதன்கிழமை மதியம், தங்கள் குடும்பத்தின் மூத்த நபரான மல்லேஸ்வரய்யா மற்றும் அவரது மகன் ஆசித்தின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட போது குடும்பமே நொறுங்கிப் போனது.

செவ்வாய் இரவு முழுவதும், செல்லும் ஆம்புலன்ஸ்களில் எல்லாம் தன் கணவர் ஆசித் இருக்கிறாரா என்று பார்த்துக் கொண்டே கலங்கி நின்றிருந்த 6 மாத கர்ப்பிணியான ஜோதி, ஆசித்தின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அறிந்து சொல்லொணாத் துயரம் அடைந்தார்.

ஒரே விபத்தில் இரண்டு நபர்களைப் பறிகொடுத்த குடும்பத்தினர் கூறுகையில், வழக்கமாக இருவருமே மதியம் 2.30 மணிக்கு உணவுக்காக வீட்டுக்கு வந்து விடுவார்கள். ஆனால் அன்றைய தினம் சற்று வேலை இருந்ததால் அவர்கள் 3.30 மணி வரை கடையிலேயே இருந்தனர். அப்போதுதான் அந்த துயர சம்பவம் நடந்து இருவருமே மரணித்துவிட்டனர். வழக்கம் போல மதிய வேளை உணவுக்கு வந்திருந்தால் மரணம் நிகழ்ந்திருக்காதே என்று சொல்லி கலங்குகிறார்கள்.

ஜோதியின் சகோதரர் கூறுகையில், இடிந்து விழுந்த கட்டடத்தில் ரூ.20 லட்சம் கொடுத்து ஒரு கடையை வாங்கி ஹார்ட்வேர் கடை திறந்தோம். தற்போது எதுவும் இல்லை. எனது சகோதரி கர்ப்பிணியாக உள்ளார், குடும்பத்துக்காக சம்பாதித்த இருவருமே இப்போது இல்லை என்கிறார் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளோடு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.