/

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது வீரர் அல்ல இளைஞர்: ராணுவம்

புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டது வீரர் அல்ல இளைஞர் என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2019, 12:35 pm


ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டது வீரர் அல்ல இளைஞர் என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா பேசுகையில், உயிரிழந்த ஷௌகத் அகமது நாயக், ராணுவத்தில் சேர்ந்தாரே தவிர, அவர் ராணுவ வீரராக பதவியேற்றுக் கொள்வில்லை.

கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ராணுவ படைக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வாகி, ஜம்மு காஷ்மீரில் பயிற்சி முடித்தார். அதன்பிறகு செப்டம்பர் மாதம் அவர் விடுமுறையில் சென்று மீண்டும் பணியில் சேரவில்லை.

எனவே, அவர் செப்டம்பர் மாதமே ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.