சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ராஜஸ்தானில் பரிதாபம்: ஐந்து மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்! 

ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், மகன் இல்லாத ஏக்கத்தில், தனது ஐந்து மகள்களுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:22 am

ENS


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், மகன் இல்லாத ஏக்கத்தில், தனது ஐந்து மகள்களுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டம் பவாடி கலா கிராமத்தில் புதன்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அரசுப் பள்ளி ஆசிரியையாக இருப்பவர் ரனராம் ஜாத். இவருக்கும், வனு தேவிக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். தனக்கு ஒரு ஆண் மகன் இல்லையே என்று வனு தேவி அடிக்கடி வருத்தப்படுவாராம். 

சம்பவத்தன்று, ரனராம் வேலைக்குச் சென்ற பிறகு, தனது ஐந்து மகள்களையும் கிணற்றுக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருவராகத் தள்ளிக் கொலை செய்த வனு தேவி, பிறகு தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பெண்கள் படித்த பள்ளியின் தாளாளர் சம்பவம் குறித்து அறிந்ததும் வேதனை தெரிவித்தார். ஐந்து பெண்களும் நன்கு படிக்கக் கூடியவர்கள், கடந்த வாரம்தான் ரனராம் வந்து பள்ளிக் கட்டணத்தை செலுத்தினார். 24ம் தேதி பள்ளி திறந்தும் கூட, ஐந்து பேரும் கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. அதற்குள் இடியான் இந்த செய்தி கிடைத்தது என்கிறார் ஆதங்கத்தோடு.

காவல்துறை எஸ்.பி. இது குறித்துக் கூறுகையில், பெண்களே, தற்கொலை என்றுமே, எந்தப் பிரச்னைக்குமே தீர்வாகாது. உங்கள் நண்பர்கள், நலம் விரும்பிகளுடன் பிரச்னையை பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்கள் உங்கள் பிரச்னையைக் கேட்கவில்லை என்றால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் உங்கள் பிரச்னையைப் பேசுங்கள். இதுபோன்ற விஷயங்களில் விழிப்புணர்வு நிச்சயம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.