கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சமையல் வேலையை எளிதாக்க புதிய திட்டம் வருகிறது: ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

சமையல் செய்யும் வேலையை எளிதாக்க மிக்ஸி, கிரைண்டர் வந்ததெல்லாம் போதாது என்று விஜயவாடாவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விருக்கின்றனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:40 am

ENS


சமையல் செய்யும் வேலையை எளிதாக்க மிக்ஸி, கிரைண்டர் வந்ததெல்லாம் போதாது என்று விஜயவாடாவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விருக்கின்றனர்.

பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலும், வேலைக்குப் போகும் பெண்களின் வேலையை எளிதாக்கும் வகையிலும், அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில் கிருஷ்ணா மாவட்ட அரசு அதிகாரிகள் யோசித்த போது உதித்ததே இந்த திட்டம்.

அதன்படி முதற்கட்டமாக ரைத்து காய்கறி சந்தையில், காய்கறிகளை மட்டும் விற்பனை செய்யாமல், சமையல் செய்யத் தேவையான வகையில் நறுக்கிய காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, காய்கறி சந்தையில் இதற்காக இரண்டு கடைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொன்றிலும் தலா ஆறு பெண்கள் பணியாற்றுவார்கள். இங்கு காய்கறிகளும் விற்கப்படும். இங்கு காய்கறி வாங்கி அதை சமையலுக்குத் தேவையான வகையில் நறுக்கிப் பெற்றுக் கொள்ளலாம். அதில்லாமல் வேறு கடைகளில் வாங்கிய காய்கறிகளையும் இங்கே நறுக்கிக் கொள்ளலாம்.

இது மட்டுமா? பெண்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம், காய்கறி மற்றும் அது எந்த வடிவத்தில் வெட்டப்பட வேண்டும் என்பது குறித்து ஆர்டர் கொடுத்துவிட்டால், காய்கறி விலையை விட கூடுதலாக நறுக்குவதற்கு என்று ஒரு கிலோவுக்கு ரூ.10 கட்டணத்துடன் நறுக்கியக் காய்கறிகளை வீட்டுக்கேக் கொண்டு வந்து கொடுக்கும் திட்டமும் இதனுள் அடங்கும்.

இந்த திட்டம் ஏற்கனவே விசாகப்பட்டினத்தின் பல்வேறு காய்கறி சந்தைகளிலும் வழக்கத்தில் இருக்கும் ஒரு திட்டம்தான். முதல் முறையாக விஜயவாடாவில் இதனை அமல்படுத்த முடிவெடுத்துள்ளோம். விரைவில் இது தொடங்க உள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.

அசைவ உணவுகளான மீன், கறி போன்றவற்றை நறுக்கிப் பெற்றுக் கொள்வது போல இனி காய்கறிகளையும் நறுக்கிப் பெற்றுக் கொள்ளலாம் என்பது நிச்சயம் பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.