அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கடும் வறட்சியால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் செய்த விநோத விளம்பரம்

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதால் விவசாயக் கடனை கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் கிராமம் விற்பனைக்கு என்ற விளம்பரத்தை வைத்துள்ளனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:35 am

ENS


மும்பை: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதால் விவசாயக் கடனை கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் கிராமம் விற்பனைக்கு என்ற விளம்பரத்தை வைத்துள்ளனர்.

பஞ்சாயத்து அலுவலகத்தில் 'முதல்வரே இந்த கிராமம் விற்பனைக்கு' என்று மிகப்பெரிய பேனரை வைத்துள்ளனர். இது பற்றி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். தங்களது கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றாலோ, பயிர் காப்பீடு கிடைக்கவில்லை என்றாலோ நாங்கள் கூட்டாக தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

விதர்பாவின் மற்ற பிற கிராமங்களைப் போலவே டக்டோடா கிராமமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3000 ஆயிரம் பேர் பயிர் கடன்களை திரும்ப செலுத்தவில்லை. 

இது பற்றி விவசாயிகள் கூறுகையில், விவசாயக் கிணறுகள் வறண்டுவிட்டன. ஏராளமான பணத்தை செலவிட்டு பயிரிட்ட பயிர்கள் நீரின்றி காய்ந்துவிட்டன. விவசாயக் கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் காய்ந்துவிட்டதால் கடனைத் திருப்பிச் செலுத்துவது முடியாமல் போனது. இப்போது நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது? என்கிறார்கள்.

மேலும், நாங்கள் வங்கிகளிடம் இருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் பெற்று விவசாயம் செய்தோம். ஆனால் அதனை எங்களால் திரும்ப எடுக்க முடியவில்லை. ஒரு லட்சத்துக்கு ரூ.15 ஆயிரம் வட்டியாக வசூலிக்கப்படுகிறது. அந்த வட்டியைக் கூட செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால்தான் எங்கள் கிராமத்தையே விற்று விடலாம் என்று விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளோம் என்கிறார்கள் கனத்த குரலில்.

தற்கொலை செய்து கொள்ளும் நிலையில்தான் விவசாயிகள் உள்ளனர். மாநில அரசும் எங்களை கைவிட்டுவிட்டது என்று கூறுகிறார்கள் விவசாயிகள் தங்களது கைகளைப் பிசைந்தபடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.