ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தாயால் கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டு, நாயால் மீட்கப்பட்ட பச்சிளம் சிசு

ஹரியாணா மாநிலத்தில் பிறந்த சில மணி நேரத்திலேயே பச்சிளம் பெண் குழந்தையை அதன் தாயே கழிவு நீர் கால்வாயில் குப்பையைப் போல தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :20 ஜூலை 2019, 11:25 am


சண்டிகர்: ஹரியாணா மாநிலத்தில் பிறந்த சில மணி நேரத்திலேயே பச்சிளம் பெண் குழந்தையை அதன் தாயே கழிவு நீர் கால்வாயில் குப்பையைப் போல தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கைத்தால் நகர் பகுதியில் பச்சிளம் பெண் குழந்தை கால்வாயில் வீசப்படுவதும், அதனை இரண்டு நாய்கள் தூக்கி சாலையில் போடுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில், டோக்ரா கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண் பாலிதீன் கவரைச் சுற்றி குழந்தையை சாலையோர கழிவு நீர் கால்வாயில் தூக்கி வீசுகிறார். அவர் அங்கிருந்து நகர்ந்ததும் இரண்டு தெரு நாய்கள், அந்த பாலிதீன் கவரைப்பிடித்து இழுத்து குழந்தையை மீட்டு வெளியே போடுகின்றன. 

நாய்கள் ஓயாமல் குரைத்ததைப் பார்த்து அங்கு வந்த மக்கள், பச்சிளம் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை 1,100 கிலோ கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. அதன் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. குழந்தையை மீட்கும் தீவிர முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.