பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைகிறாராம் தோனி: முன்னாள் அமைச்சர் ஆரூடம்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, பாஜகவில் இணைந்து புதிய இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று முன்னாள் அமைச்சர் ஆரூடம் கூறியுள்ளார்.

News image
Updated On :13 ஜூலை 2019, 5:43 am


புது தில்லி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, பாஜகவில் இணைந்து புதிய இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று முன்னாள் அமைச்சர் ஆரூடம் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சஞ்சய் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.

தோனி பாஜகவில் இணையலாம் என்றும் இது பற்றி பாஜகவில் பல காலமாகப் பேசப்பட்டு வருவதாகவும் கூறிய சஞ்சய், ஆனால் தோனி ஓய்வு பெற்ற பிறகே இது பற்றி உறுதியாகக் கூற முடியும் என்று தெரிவித்தார்.

தோனி எனது நண்பர். உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர், அவரை பாஜகவுக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என்றார்.

தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அப்போது தோனியின் பாஜக பிரவேசம் நடக்கலாம். ஒரு  வேலை தோனி பாஜகவில் இணைந்தால், அவர் ஜார்க்கண்டுக்கான பாஜக முதல்வர் வேட்பாளராகக் கூட அறிமுகப்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.