மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கோவா அமைச்சரவையில் புதியவர்களுக்கு இடம்: பழைய கூட்டணிக்கு கும்பிடு போட்ட பாஜக

கோவா அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களான சந்திரகாந்த் கவ்லேகர், ஜெனிஃபர், ஃபிலிப்பே நேரி ரோட்ரிஜியஸ் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ ஆகியோர் இன்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

News image
Updated On :13 ஜூலை 2019, 12:14 pm


பனாஜி: கோவா அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களான சந்திரகாந்த் கவ்லேகர், ஜெனிஃபர், ஃபிலிப்பே நேரி ரோட்ரிஜியஸ் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ ஆகியோர் இன்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் கடந்த புதன்கிழமை பாஜகவில் இணைந்தனர். 

கோவாவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்களில் 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட ஏதுவாக, பாஜக கூட்டணி கட்சியான கோவா முன்னணி கட்சியைச் (ஜிஎஃப்பி) சேர்ந்த மூன்று அமைச்சர்களை பதவியில் இருந்து விலகுமாறு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்ததால், அமைச்சரவையில் இருந்து மூன்று பேரையும் நீக்கி நடவடிக்கை எடுத்தார் முதல்வர். அதேப் போல சுயேச்சை எம்எல்ஏவான ரோஹன் கெளந்த்தேவும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது பாஜகவை சாராத எம்எல்ஏவான கோவிந்த் கௌடே மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

ஜிஎஃப்பி கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய், வினோத் பாலிகர் மற்றும் ஜெய்ஷ் சல்கோன்கர் ஆகிய மூன்று பேரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டவர்களாவர்.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர், தற்போது பிற கட்சிகளில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைவதுதான் தேசிய அளவில் டிரெண்டாக உள்ளது என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.