பாட்னா: பாட்னாவைச் சேர்ந்த கல்வியாளர், சூப்பர் 30 நிறுவனர் ஆனந்த் குமார், மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்தின் வாழ்க்கை வரலாறு, சூப்பர் 30 என்ற பெயரில் பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைப்படமாக வெளியாக உள்ள நிலையில், ஆனந்த் குமார் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
ஏழ்மையோடு போராடிய ஆனந்த், பல மாணவர்களின் ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை சாதனையாளராக்கியது மட்டுமே இதுவரை நமக்குத் தெரியும். ஆனால் அவர் மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வருவது தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவர் அளித்த பேட்டியில், இந்த பிரச்னை 2014ம் ஆண்டு தொடங்கியது. எனக்கு அப்போது காது கேட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மருத்துவர்களை நாடி பரிசோதனை செய்ததில், காதில் எந்த பிரச்னையும் இல்லை, மூளையில் இருந்து வலது பக்கக் காதுக்கு வரும் நரம்பில் உருவாகியுள்ள கட்டிதான், காது கேளாத பிரச்னைக்குக் காரணம் என்று தெரிய வந்தது. சோதனையில், வலது பக்கக் காதின் கேட்புத் திறன் வளர்ந்து வரும் கட்டியால் 90 சதவீதம் சேதமடைந்துவிட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து தில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது என்றார். இது புற்றுநோய்க் கட்டி இல்லை என்றாலும், இந்த கட்டி பாதித்ததால் இன்னும் 10 ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என்று அப்போது மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
தற்போதைய உடல்நிலையால், தனது வாழ்க்கைப் பற்றிய திரைப்படம் தயாரிக்கும் பணிகள் விரைவில் முடிவடைய வேண்டும் என்று அவர் விரும்பினார்.
வாழ்க்கை மற்றும் மரணம் பற்றி எந்த சிந்தனையும் தற்போது எனக்கு இல்லை. ஆனால், நான் உயிரோடு இருக்கும் போதே இந்த திரைப்படம் வெளியாக வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன் என்கிறார் ஆனந்த்.
ஹிருத்திக் ரோஷன் புகழ்பெற்ற நடிகர். அவர் நடித்து வெளியாகும் சூப்பர் 30 திரைப்படம் மூலம் எனது வாழ்க்கை உலக அளவில் தெரியவரும் என்று நாம்புகிறேன் என்றும் ஆனந்த் குமார் கூறுகிறார்.
ஹிருத்திக் ரோஷன் நடித்திருக்கும் சூப்பர் 30 திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் த.வெ.க. தலைவர் விஜய் தரிசனம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


