ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? வெளியே செல்லுங்கள்! மக்களவை சபாநாயகர் உத்தரவு

ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? வெளியே செல்லுங்கள்! என்று கல்லூரியிலோ, பள்ளியிலோ ஆசிரியர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இதே சம்பவம் மக்களவையில் நடந்துள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2019, 6:06 am


புது தில்லி : ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? வெளியே செல்லுங்கள்! என்று கல்லூரியிலோ, பள்ளியிலோ ஆசிரியர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இதே சம்பவம் மக்களவையில் நடந்துள்ளது.

மக்களவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையில் இருக்கும் போது மிக ஒழுக்கமாக இருக்க வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று மக்களவையில் அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த போது, அதைக் கவனிக்காமல் சொந்தக் கதை பேசிக் கொண்டிருந்த எம்.பி.க்களை கூப்பிட்டு, அவை நடவடிக்கைகளை கவனிக்காமல் பேசிக் கொண்டிருப்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.

முன்னதாக கடந்த வாரம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை கண்டித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா, அவைத் தலைவரின் பணியை நீங்கள் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், நேற்று அவை நடவடிக்கைகளை கவனிக்காமல் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த எம்பிக்களை நோக்கி, "சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டும், சிலர் ஆங்காங்கே நின்று கொண்டும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இது அவை. நீங்கள் நினைப்பது போலத்தான் அவையை நடத்த வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார். ஆனால், அது சரியா?" என்று பிர்லா கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்களவையில் எம்.பி.க்கள் பேசிக் கொண்டிருப்பதை ஒருகாலும் நான் அனுமதிக்க மாட்டேன். நாடாளுமன்ற வளாகத்தின் வெளிப்புறம் இரண்டு அடி எடுத்து வைத்தால் வந்துவிடும். ஒரு வேளை உங்களுக்கு பேச வேண்டும் என்றால் வளாகத்துக்குச் சென்றுவிடுங்கள் என்று கூறினார். இதற்கு சில உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.

திரிணாமூல் எம்பி சுதீப் கூறுகையில், பிர்லா மிகவும் கண்டிப்புடன் இருக்கிறீர்கள், எம்.பி.க்களின் இந்த பழக்கத்தை அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.