நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்த ஆண்டு நாட்டுக்கு மிக முக்கியமான ஆண்டு: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

இந்த ஆண்டு அதாவது 2019 நாட்டுக்கு மிக முக்கியமான ஆண்டாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2019, 5:52 am


புது தில்லி: இந்த ஆண்டு அதாவது 2019 நாட்டுக்கு மிக முக்கியமான ஆண்டாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது, சாமானிய மக்களின் வாழ்வு மாற வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கியக் கொள்கை. ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் பல கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். மக்களின் ஆரோக்கியம் காப்பதுதான் மத்திய அரசின் முக்கியக் கடமையாக உள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அம்பேத்கர் மற்றும் காந்தியின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தால் 6 கோடி மக்கள் பயனடைந்தார்கள். நாடு முழுவதும் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வை மத்திய அரசு மிகத் திறமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு குடும்பம் கூட மின்சார வசதி இல்லாமல் அவதிப்படக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசும் பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.