மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஜிஎஸ்டி வரி விலக்கு உச்சவரம்பு இரட்டிப்பு: சிறு தொழில் நிறுவனங்களுக்கு இனிக்கும் பொங்கல்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கின் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2019, 12:17 pm


புது தில்லி: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கின் உச்சவரம்பு வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20 லட்சமாகவும் இதர பகுதி மாநிலங்களுக்கு ரூ.40 லட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கும் குறைவான வருமானம் ஈட்டும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த உச்சவரம்பை ரூ.40 லட்சமாக அதிகரித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

மேலும், சிறு வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் தொகுப்பு சலுகைத் திட்டத்துக்கான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இவ்விரு முடிவின் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய லாபம் அடையும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகளைக் களைய 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து முடிவெடுப்பது என்று முடிவடுக்கப்பட்டிருப்பதாகவும் அருண் ஜேட்லி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.