மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி லலித் விலகல்

அயோத்தி விவகாரம் குறித்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி லலித் தாமாக விலகினார்.

Updated On :10 ஜனவரி 2019, 7:25 am


புது தில்லி: அயோத்தி விவகாரம் குறித்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி லலித் தாமாக விலகினார்.

இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை வழக்கு விசாரணைக்கு அமர்வு கூடியதும், முஸ்லிம் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், கடந்த 1994ம் ஆண்டு உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் சார்பில், தற்போதைய அரசியல் சாசன அமர்வில்  இடம்பெற்றிருக்கும் நீதிபதி லலித் ஒரு வழக்குக்காக ஆஜரானார் என்று குறிப்பிட்டார். ஆனால் அதற்காக அவரை இந்த  அரசியல் சாசனத்தில் இருந்து விலக வேண்டும் என்று தான் வலியுறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதைக் கேட்டதும், அயோத்தி விவகாரம் குறித்து விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி லலித் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு இன்று அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, என்.வி. ரமணா, யு.யு.லலித், டி.ஒய். சந்திராசூட் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியிட்டது. அதில் 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, வழிபாட்டுக்கு உரிய ராம் லாலா ஆகியவை தங்களுக்குள் சரி சமமாக, மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பரிசீலித்த உச்சநீதிமன்றம், அதன் மீது 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.