மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

காஷ்மீர் மட்டும் வேண்டும், காஷ்மீர் மக்கள் வேண்டாமா? சிதம்பரம் கேள்வி

சிலர் காஷ்மீர் மட்டும் இந்தியாவின் ஒரு அங்கமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால், காஷ்மீர் மக்களும் இந்தியர்கள்தான் என்று நினைப்பதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

News image
Updated On :21 பிப்ரவரி 2019, 7:53 am


புது தில்லி: சிலர் காஷ்மீர் மட்டும் இந்தியாவின் ஒரு அங்கமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால், காஷ்மீர் மக்களும் இந்தியர்கள்தான் என்று நினைப்பதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

காஷ்மீர் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு எதிராக எழுப்பப்படும் வாதங்கள் மனதை அழுத்துவதாகக் கூறியிருக்கும் சிதம்பரம், காஷ்மீரில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்க வேண்டாம் மற்றும் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்ற கொள்கையை வலியுறுத்தி மேகாலயா ஆளுநர் தத்தகட்டா ராய் பேசிய பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, நமக்கு காஷ்மீர் மட்டும் இந்தியாவின் ஒரு அங்கமாக வேண்டும், ஆனால் காஷ்மீர் மக்களும் இந்தியர்கள்தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றும் அல்லது படித்து வரும் காஷ்மீர் இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் நிலை குறித்தும், சில இளைஞர்கள் தங்களது வேலை மற்றும் கல்வியை விட்டுவிட்டு வீடு திரும்பியது குறித்தும் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.