புது தில்லி: துணை ராணுவ வீரர்கள் இனி, தில்லி - ஸ்ரீநகர், ஜம்மு - ஸ்ரீநகர் இடையே விமானத்தில் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரரக்ள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, துணை ராணுவ வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, துணை ராணுவ வீரர்கள் தில்லி - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - தில்லி, ஜம்மு - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - ஜம்மு இடையே பயணிக்கும் போது விமானத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், துணை ராணுவத்தினர் விடுப்பில் செல்லும் போதும் விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் 7.80 லட்சம் துணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
இந்த அனுமதியின் மூலம், இதுவரை விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லாத துணை ராணுவத்தில் பணியாற்றும் காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி துணை ஆய்வாளர்கள் இனி விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், துணை ராணுவத்தினரை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது, ஏற்கனவே இவர்களுக்காக இயக்கப்படும் விமான சேவை மட்டுமல்லாமல், ஒரு விமானத்தையே இவர்களுக்காக முன்பதிவு செய்து இயக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் செல்லும் போதும் திரும்பும் போதும்கூட துணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்கவும், பொதுமக்கள் செல்லும் விமானங்களில் தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு பிறகு டிக்கெட்டுக்கான கட்டணத்தை பெற்றுக் கொள்ளவும் இயலும் என்று மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விமான வசதி இல்லாத இடங்களில் மிகப் பாதுகாப்பான வாகனங்களில் துணை ராணுவத்தினர் பயணிப்பர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


