புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்துத் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில், இன்று இயந்திரக் கோளாறு காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் துண்ட்லாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
தில்லியில் இருந்து வாராணசி சென்றுவிட்டு, வாராணசியில் இருந்து ரயில் திரும்பி வரும் போது, கன்றுக்குட்டி மீது மோதியதால், ரயில் தண்டவாளத்தில் வழுக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகள் வேறு வேறு ரயில்களில் ஏறிச் சென்றனர்.
மணிக்கு 160 கிமீ பயணிக்கக் கூடிய வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பல்வேறு புதுமைகளை மத்திய அரசு புகுத்தி வருகிறது. அந்த வகையில், பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் என்ற ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரித்தது.
இந்த ரயிலின் சோதனை ஓட்டங்கள் அண்மையில் நிறைவடைந்தன. அப்போது மணிக்கு 180 கிமீ வேகம் வரை இயக்கப்பட்டு வந்தே பாரத் ரயில் பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அப்போது, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், தலைநகர் தில்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசி வரையிலான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் தொடங்கியது. அப்போது, பியூஷ் கோயல், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
முழுவதும் குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலில் 1,128 பயணிகள் பயணிக்கலாம். ரயில் பெட்டிகள் அனைத்திலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களின் வருகை குறித்து தகவல் தெரிவிக்கும் வசதியும், வை-ஃபை வசதியும் இந்த ரயிலில் உள்ளன.
நவீன தொழில்நுட்பத்திலான கழிவறை, ஒவ்வொரு இருக்கைக்குக்கும் தனித்தனி மின்விளக்கு வசதி, ஒவ்வொரு பெட்டியிலும் குளிர்பான வசதிகள் என ரயில் முழுவதும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன.
தில்லியிலிருந்து வாராணசி வரை வாரம் 5 முறை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. ரயிலுக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை வந்தே பாரத் ரயில் வெகுவாகக் குறைக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


