மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புல்வாமா தாக்குதல்: வந்தேபாரத் விரைவு ரயில் துவக்கி வைக்கப்பட்டது ஏன்? இதோ பதில்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், வந்தே பாரத் விரைவு ரயில் துவக்கி வைக்கப்பட்டது பெரும் சலசலப்பை

News image
Updated On :15 பிப்ரவரி 2019, 10:52 am


ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், வந்தே பாரத் விரைவு ரயில் துவக்கி வைக்கப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி - வாராணசி இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

புல்வாமா தாக்குதல் நடந்திருக்கும் நிலையில், இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.

அதாவது, 26/11 தாக்குதலின் போது மும்பை மக்கள் அதனை எப்படிக் கையாண்டார்கள் என்பதை முன்னுதாரணமாகக் கொண்டே, வந்தேபாரத் ரயில் துவக்க விழாவை ரத்து செய்யாமல், முன்னெடுத்துச் செல்ல தூண்டுகோலாக இருந்தது என்று அமைச்சர் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை தாக்குதலின் போது, எதற்காகவும் அஞ்சி பொதுமக்கள் யாரும் வீட்டுக்குள் முடங்கிவிடவில்லை. தங்களது அன்றாடப் பணிகளைச் செய்ய வழக்கம் போல அனைவரும் வெளியே கிளம்பினர். அதேப்போலத்தான் வந்தேபாரத் விரைவு ரயிலும் இன்று தனது சேவையைத் துவக்கியுள்ளது. இது மக்களுக்காக அரசு ஆற்றும் கடமையாகும்.

இதுதான் பயங்கரவாதத்துக்குக் கொடுக்கும் மிகப்பெரிய பதிலடி என்று கோயல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.