மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புல்வாமா தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 43 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

News image

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் குவிக்கப்பட்ட ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர்.

Updated On :15 பிப்ரவரி 2019, 5:24 am


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 43 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலை குறித்தும், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்தும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 வீரர்கள் பலியாகினர்.

இந்திய பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பயங்கரத் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.