மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால்: எம்பிக்களிடையே புன்னகையை வரவழைத்த சுமித்ரா மகாஜன்

மக்களவை உறுப்பினர்கள் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டால் எனது வேலை எளிதாகிவிடும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2019, 7:59 am


புது தில்லி: மக்களவை உறுப்பினர்கள் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டால் எனது வேலை எளிதாகிவிடும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும், அவை ஒத்திவைப்பதும் என இருக்கும் நிலையில், சுமித்ரா மகாஜனின் இந்த பேச்சால் மக்களவை உறுப்பினர்கள் அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

கேள்வி நேரத்தின் போது பேசிய மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சம்பத், எனது இதயத்தில் இருந்து இந்த கேள்வியைக் கேட்பதாகக் கூறினார்.

கேள்விக்கு பதிலளிக்க எழுந்த மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை இணை இயக்குநர் ராஜ்யவர்தன் ரத்தோர், தானும் இதயத்தில் இருந்தே பதிலளிப்பதாகத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட சுமித்ரா மகாஜன், இங்கிருக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் எனது வேலை எளிதாகி விடும் என்று கூறினார். இதைக் கேட்ட மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.