அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஒடிஸாவிலும் விற்பனைக்கு வந்தது துருக்கி வெங்காயம்

ஒடிஸாவிலும் காய்கறிகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது துருக்கி வெங்காயம்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை

புவனேஸ்வர்: ஒடிஸாவிலும் காய்கறிகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது துருக்கி வெங்காயம்.

முதல் முறையாக ஒடிஸாவுக்கு துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், சந்தைகளுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒடிஸா மக்களும் துருக்கி வெங்காயத்தை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து காய்கறிகள் மற்றும் வெங்காயம் வரத் தொடங்கியிருப்பதும், உலக நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்திருப்பதன் மூலமும் மெல்ல வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. தற்போது ஒடிஸாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30க்கு விற்பனையாகிறது.

அதே சமயம், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கு வரத்து குறைந்திருப்பதால், அதன் விலை அதிகரித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உருளைக்கிழங்கு வணிகர்கள், தங்களது கிடங்கில் இருந்து அனைத்து உருளைக்கிழங்குகளையும் விற்பனைக்கு அனுப்பிவிட்டு, ஜனவரி மாதம் 2ம் வாரத்தில் புதிதாக விளையும் உருளைக் கிழங்குகளை பத்திரப்படுத்தத் தேவையான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உருளைக் கிழங்கு விளைச்சலின் ஒரு பருவக்காலம் முடிந்து, அடுத்த பருவக் காலத்துக்காகக் காத்திருக்கும் நேரம் இது. எனவே, புதிய பருவக்காலத்தில் விளைந்த உருளைக் கிழங்கு வரும் வரை அதன் விலை உயர்ந்தே இருக்கும் என்கிறார்கள் வியாபாரிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.