புது தில்லி: கடந்த எட்டு மாதங்களாக எரிபொருள் கட்டண பாக்கியை செலுத்தாமல், ஏர் இந்தியா நிறுவனம் ரூ.5,000 கோடியை நிலுவை வைத்திருப்பதாக இந்தியன் ஆயிர் கார்ப்பரேஷன் குற்றம்சாட்டியுள்ளது.
நிலுவைத் தொகையை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, கடந்த வியாழக்கிழமை முதல் இந்தியாவில் உள்ள 6 முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்தியுள்ளன.
அதாவது கொச்சி, புனே, பாட்னா, ராஞ்சி, விசாகப்பட்டினம், மொஹாலி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் சேவையை பெட்ரோலியம் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.
பெட்ரோலியம் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன. சுமார் 8 மாதங்களாக எரிபொருள் கட்டணத்தை செலுத்தாததால், இன்னும் 3 மாதங்களுக்குள் ரூ.5000 கோடியை செலுத்த வேண்டும் என்று பெட்ரோலியம் நிறுவனங்கள் ஏர் இந்தியாவுக்கு காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளன.
இது குறித்து ஏர் இந்தியாவுக்கு கடிதம் வாயிலாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


