பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காஷ்மீர் விவகாரம்: அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2019, 1:01 pm

புது தில்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370-ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அம்மாநிலமானது இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டிருந்த தொலை தொடர்பு உள்ளிட்ட சேவைகள் பகுதி பகுதியாக அளிக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஏறக்குறைய 11 நாட்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீரில்தான் தங்கி இருந்து, அங்குள்ள பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அவர் சமீபத்தில்தான் தில்லி திரும்பினார்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது.

தில்லியில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்திற்கு அமித் ஷா தலைமை தங்குகிறார். அஜித் தோவலுடன் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர்.  

காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்தும் அங்கு எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் மறு ஆய்வு செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.