குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

லடாக்கில் ராணுவ வீரர்களோடு சுதந்திர தினம் கொண்டாடிய 'தல' தோனி!

ஜம்மு காஷ்மீரில் ராணுவப் பயிற்சி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி இன்று லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:49 am

ENS

ஜம்மு காஷ்மீரில் ராணுவப் பயிற்சி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி இன்று லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,  ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ளார். உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடருக்குப் பின்னர்,  அவர் 2 மாதங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் ராணுவப்  பயிற்சிக்காக சென்றுள்ளார். கடந்த ஜூலை 31ம் தேதி சென்ற அவர், ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் தங்கி, பாராசூட் ரெஜிமண்டில் பயிற்சி பெற்று வருகிறார். 106 டெரிட்டோரியல் ஆர்மி பட்டாலியன் குழுவினருடன் இணைந்து அவர் பணியாற்றி வருகிறார். ராணுவ வீரர்களுடன் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், இன்று நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, தோனி நேற்று லடாக்கிற்கு வந்தார். அங்குள்ள ராணுவ அதிகாரிகள், அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ராணுவ வீரர்களோடு அவர் கலந்துரையாடினார். 

அதன் தொடர்ச்சியாக, லடாக்கில் உள்ள ராணுவ மருத்துவனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெறும் வீரர்கள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடினார். 

இன்று லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் அவர் சுதந்திர தினத்தை கொண்டாடினார். 

முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.