பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காஷ்மீர் விவகாரம்: பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தான் என்ன செய்திருக்கிறது தெரியுமா?

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2019, 7:58 am


புது தில்லி: காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளுக்கு அருகே சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்த சுமார் 12க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

2019ம் ஆண்டு மே மாதம் முற்றிலும் மூடப்பட்டு இருந்த இந்த முகாம்களில் தற்போது ஆட்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கோட்லி, ரவால்கோட், பாக் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பயங்கரவாத முகாம்களின் அருகே இந்திய பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இரண்டு நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசும் போது, இந்தியாவில் புல்வாமா போன்ற அல்லது அதைவிட மிக மோசமான தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று கூறியிருந்தார்.

இம்ரான் கான் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் வாய்மொழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த முழு சுதந்திரம் அளித்திருப்பதாககே கருதப்படுகிறது.

இந்திய எல்லையோரப் பகுதிகளில் இருக்கும் பயங்கரவாத முகாம்களில் சுமார் 150 பயங்கரவாதிகள் எந்நேரமும் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

கடந்த வாரத்தின் துவக்கத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.