குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

சல்மான் கான் பற்றி துப்பு கொடுத்தால்.. பரிசு அறிவித்தது அஸ்ஸாம் குடும்பம்: சுறா படம் பாணியில் சுவாரஸ்யம்

மனம் உடைந்து  போயிருக்கும் அஸ்ஸாம் குடும்பம் ஒன்று, சல்மான் கான் பற்றி துப்பு கொடுத்தால் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:45 am

ENS


குவகாத்தி: மனம் உடைந்து  போயிருக்கும் அஸ்ஸாம் குடும்பம் ஒன்று, சல்மான் கான் பற்றி துப்பு கொடுத்தால் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆனால், நீங்கள் நினைப்பது போல சல்மான் கான் ஒன்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் எல்லாம் இல்லை. அது ஒரு அழகிய ஆடு. 

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் ககோபத்தர் கிராமத்தைச் சேர்ந்த குலாம் மன்சூரி குடும்பத்துக்கு சொந்தமானதுதான் அந்த அழகிய ஆடு.

Story image

இந்த ஆடு காணாமல் போன நிலையில், அதனை தேட எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், ஆடு பற்றி ஏதேனும் தகவல் தெரிவித்தால் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நாங்கள் அதனை தபங் சல்மான் கான் என்றுதான் ஆசையோடு அழைப்போம். அதன் செல்லப் பெயர் சோனு. அது எங்கள் குடும்பத்தில் ஒன்றாகவே கலந்து விட்டது. அது எனது சகோதரர் போல. அது சுமார் 40 கிலோ எடையுடன் இருக்கும் என்று குலாம் மன்சூரியின் மகன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். என் பெற்றோர் சாப்பாடு கூட சாப்பிடாமல் மனம் கலங்கி இருக்கிறார்கள். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்த சோனுவைக் காணாமல் ஏங்கிப் போய்விட்டனர் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம், அந்த சோனுவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.7000 முதல் ரூ.10000 வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.