எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

அத்துமீறி நுழைந்த பாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்களை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:43 am

ENS

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில், அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடத்த வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின்படி அனைவரையும் உடனடியாக காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு இந்திய ராணுவம் எச்சரித்தது.

இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்களை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர். இதில் பாக். கமாண்டோவைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அதிபயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

ஜூலை 31-ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 36 மணிநேரத்தில் இந்த போக்கு தீவிரமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் மூலம் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 7 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் பாகிஸ்தானின் முத்திரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.